சனி, 13 மார்ச், 2010

தனிவாக்கியம்,தொடர் வாக்கியம்

தனிவாக்கியம்

ஓர் எழுவாயின் முற்றுப்பெற்ற ஒரேடியாரு செயலை மாத்திரம் கூறும் வாக்கியம் தனிவாக்கியமாகும்.
எ-கா:
1. அ) கிளி மாமரத்தில் இருந்தது
ஆ) கிளி மாம்பழத்தைக் கொத்தியது

2. அ) உழவர்கள் வயலை உழுதார்கள்.
ஆ) உழவர்கள் நெல்லை விதைத்தார்கள்.
இ) உழவர்கள் விளைந்த நெல்லை அறுவடை செய்தார்கள்.

தொடர் வாக்கியம்

தனித்தனியாக இயங்கக் கூடிய ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள், பல குறைவினைகளையும் ஒரு வினைமுற்றையும் கொண்டு முடிவது தொடர்வாக்கியமாகும்.
எ-கா:
1. கிளி மாமரத்திலிருந்து மாம்பழத்தைக் கொத்தியது.

2. உழவர்கள் வயலை உழுது, நெல்லை விதைத்து, விளைந்த நெல்லை அறுவடை செய்தார்கள்.