சனி, 13 மார்ச், 2010

எண்

எண்:
எண்ணிக்கை அடிப்படையில் எண் ஒருமை, பன்மை என இருவகைப்படும்.

ஒருமை:
ஒன்றை, ஒருவரைக் குறிப்பது ஒருமை.

எ-கா: பூனை, பூ, மலை, அது, சிறுவன், ஓவியன், தோழி

பன்மை:

எ-கா: பூனைகள், பூக்கள், மலைகள், அவை, சிறுவர்கள், ஓவியர்கள்

இடம்:
தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் நிலைகள் இடவகைகள் ஆகும்.

தன்மை
தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் குறிப்பது தன்மை இடம்.

எ-கா: நான், யான், நாம், யாம், நாங்கள்

முன்னிலை
முன் நிற்பவரைக் குறிப்பது முன்னிலை இடம்.

எ-கா: நீ, நீர், நீயிர், நீவிர், நீங்கள்

படர்க்கை:
தன்மை முன்னிலை நீங்கிய மற்றையவை படர்க்கை இடம்.

எ-கா: அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, பொன், மன்னன், சேவல்