செவ்வாய், 29 ஜூன், 2010

தொடர்பாடல் முறைகள்

தொடர்பாடல் முறைகள்

உணவறிந்து உண்

உணவறிந்து உண்

சுற்றுலா

சுற்றுலா

வீட்டுத்தோட்டம்

வீட்டுத்தோட்டம்

பாரி மகளிர்

பாரி மகளிர்

மறப்பேனா?

மறப்பேனா?

யாழ்ப்பாணத் தமிழரசு

யாழ்ப்பாணத் தமிழரசு

கொண்டாட்டங்கள்

கொண்டாட்டங்கள்

தமிழீழ நாடும் விடுதலைப் போராட்டமும்

தமிழீழ நாடும் விடுதலைப் போராட்டமும்

நாட்டார் பாடல்கள்

நாட்டார் பாடல்கள்

எழில் கொஞ்சும் மயிலாடுமலை

எழில் கொஞ்சும் மயிலாடுமலை

மூட ஆமை

குளம் ஒன்றில் ஆமையும்.....

தாயகத்தில் ஒரு குடும்பம்

தாயகத்தில் ஒரு குடும்பம்
பாடம் தொடரும்...

தமிழ்ச் செல்வம் ஆகமாட்டாயா?

தமிழ்ச் செல்வம் ஆகமாட்டாயா?

துன்பம் நேர்கையில் யாழெ டுத்துநீ....

மாமன்னன் எல்லாளன்

மாமன்னன் எல்லாளன் இலங்கையை எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தான்?
எல்லாள மாமன்னன் நாற்பத்து நான்கு ஆண்டுகள் இலங்கையை ஆண்டான்.

எல்லாளன் கட்டிய பெலிவாவி இன்று எப்படி அழைக்கப்படுகிறது?

எல்லாளனது ஆட்சியில் நாடு எப்படித் திகழ்ந்தது?

மாமன்னன் எல்லாளனைத் துட்டகெகுனு எவ்வாறு கொன்றான்?

துட்டகெமுனுவும் பௌத்தபிக்குமாரும் போருக்கான முழக்கமாக எதை முன் வைத்தனர்?

எல்லாளனுக்காக நினைவிடத்தைத் துட்டகெமுனு எந்த இடத்திலே அமைத்தான்?

சொல்லியங்களில் எழுவாய் பயனிலை செயற்படுபொருள் ஆகியவற்றைக் கண்டறிக.
1. எழுவாய்:எல்லாள மாமன்னன்
2. பயனிலை:ஆண்டான்
3. செயற்படுபொருள்:இலங்கையை

தமிழர் பண்பாடு

தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு


என்ற பாடல் அடிகளை நாமக்கல் கவிஞர் பாடினார்.

பள் - பண் - பண்படு - பண்பாடு
மண்ணைப் பண்படுத்துவது போல் மனதை பண்படுத்துவதே பண்பாடாயிற்று. பண்ணைகள் நிறைந்த இடம் ஊர் எனப்பட்டது. ஊர்மக்களிடம் பண்பாடு நிறைந்திருக்கும்.

ஒப்புநோக்கிப் பார்க்க,
பண்படு - பண்பாடு
கூப்பிடு - கூப்பாடு
சாப்பிடு - சாப்பாடு. இவ் எடுத்துக்காட்டு மாணவன் கூறியது.

நகு (மெல்லிய பல்லைக்காட்டி புன்னகைத்தல்)
நகு - நகர் - நகரகம் - நகரிகம் - நாகரிகம்
வெண்பூச்சுகளால் அமைக்கப்பட்ட இருப்பிடங்கள் மாட மாளிகைகள் கோயில் கோபுரங்கள் அமைந்த இடத்தை நகர் என்றனர்.அங்கு தோன்றியதே நாகரிகம்.அறிவியலில் நோக்கின் அவை உண்மையே!

குறிப்பு:
பண்பாடு மாறாத் தன்மை கொண்டது.மனத்தின் உயர் பண்புகள் மனிதவாழ்வில் மாறாதது.
நாகரிகம் மாறும் தன்மையுள்ளது
. மக்கள் கூட்டத்தில் உணவு, உடை, உறையுள்(தங்குமிடம்) உலகத்தில் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே போகும்.

இனி,
பாடநூல் கட்டுரையைக் கவனிப்போம். தமிழர் பண்பாடு பற்றிக் கூறிய கட்டுரையிலிருந்து சொற்களுக்கு பொருள் விளக்கம்.

விழுமியங்கள் - சிறப்பியல்புகள்
விலங்குகள் - மிருகங்கள்
புலால் - இறைச்சி வகை (துர்நாற்றம் தரக்கூடியன)
மரவுரி - மரப்பட்டை
உறையுள் - தங்குமிடம்
வியக்கத்தகு - ஆச்சரியம்
மானம் - பெருமை( மன் - மான் - மானம்), குற்றம் ( மால் - மான் - மானம் (கருமை - குற்றம்).
கவரிமா - மானை ஒத்த விலங்கு
வள்ளல் - கொடையாளி
ஈகை - கொடை
கொடை - அள்ளிக்கொடுத்தல்

திருக்குறள்களும் அதற்குப் பொருள்களும்

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.


மயிர்/நீப்/பின் வா/ழாக் கவ/ரிமா வன்/னார்
உயிர்/நீப்/பர் மா/னம் வரின்.

மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்.


பொருள்: தமிழர் பண்பாட்டில் தலைசிறந்தது மானம். மானம் என்பது ஒருவன் தன் நிலையிலிருந்து தாழாதிருப்பது; தாழ்வு வரும் போது உயிர்வாழாதிருப்பது. தமிழர் மானமிழந்து உயிர் வாழ விரும்பமாட்டார்.

அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையார்
என்பு முரியர் பிறக்கு.


அன்/பிலா ரெல்/லாந் தமக்/குரி/ய ரன்/புடை/யார்
என்/பு முரி/யர் பிறக்கு.

அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார்
என்பும் உரியர் பிறக்கு.


பொருள்: அன்பு இல்லாதவர் எல்லாம் தமக்கே என்றே வாழ்வர் ஆனால் அன்பு உள்ளவரோ உடலுக்கு உரித்தாய் உள்ள எலும்பைப் போல தம்மை எல்லா உயிருக்கும் உரியர் என்று எண்ணி மனிதர்களாய் வாழ்வர்.

ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.


ஒழுக்/கம் விழுப்/பம் தர/லாம் ஒழுக்/கம்
உயி/ரினும் ஓம்/பப் படும்.

ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

பொருள்: ஒழுக்கமானது சிறப்பைத் தருவது ஆதலால் ஒழுக்கம் உயிரை விட மேலானது என்ப.

ஒருவர் எத்துணை உயர் அறிவு பெற்றிருப்பினும், மக்கட் பண்பு உடையவராக வாழ்ந்தாலே அவருக்குச் சிறப்புத் தருவதாகும். அன்றேல் (இல்லையேல்), அவர் ஆறறிவு படைத்தவராயினும், ஓரறிவுள்ள மரத்துக்கு ஒப்பாக கருதப்படுவர்.

ஒழுக்கத்தால் சிறந்தவரைத் தமிழர், 'சான்றோர்' எனப் பாராட்டி மகிழ்ந்தனர்.

கேள்விகளுக்கு பதிலைக் கூறியும் எழுதியும் பழகுக.

1.நாகரிகம் என்ற சொல் குறித்து நிற்பது யாது?
2.'பண்பாடு' என்பது விளக்குவது யாது?
3.தமிழ்மக்களின் கொடைப்பண்பு எத்தகையது?
4.சான்றோர் எனப்படுபவர் யாவர்?
5.கணைக்கால் இரும்பொறையின் மான உணர்வை விளக்கும் நிகழ்ச்சி யாது?
6.குமணனின் ஈகைப் பண்பை விளக்கும் வரலாற்று நிகழ்ச்சியை எழுதுக.

பழமொழியைக் கூறிப்பழகுவோம்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அகம் = உள்ளம், மனம், சிந்தை.
மனத்தில் உள்ளதை அப்படியே காட்டக் கூடியது முகம். அதனாலேயே இப்பழமொழி தோன்றிற்று.

மறைமொழி

அட்டாலும் பாற்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

அட்டாலும் - காய்ச்சினாலும், குன்றா - குன்றாது, அளவளாய் - ஒன்றுபட்டு, நட்டாலும் - நட்புக் கொண்டாலும், நண்பல்லார் (நண்பல்லர்) - நட்பில்லாதவர், கெட்டாலும் - ஏழ்மை, மேன்மக்கள் - உயர்ந்தோர், சுட்டாலும் - சுடுவது.

பாலை எவ்வளவு காய்ச்சினாலும் அதன் சுவை முன்றாது. சங்கைச் சுட்ட போதிலும், அது வெண்மை நிறமாகவே இருக்கும். அவை போல பண்புடைய மேலோர்கள் வறுமையால் துன்புற்ற போதிலும், பெருந் தகைமையோடு இருப்பார்கள். பண்பு இல்லாதவர்கள் நண்பர்களாக இருந்த போதிலும், நல்லவர்களாக இருக்க மாட்டார்கள்.

சங்கு.