சனி, 13 மார்ச், 2010

எழுத்து

எழுத்து

பேசும்போது ஒலிவடிவாகவும் எழுதும் போது வரிவடிவாகவும் மொழி அமையும். தமிழ் எழுத்துகளை முதலெழுத்து சார்nhழுத்து என இரண்டாக வகைப்படுத்துவர்.

முதலெழுத்து

முதலெழுத்த என்பது தமிழ்மொழியில் வழங்கும் அடிப்படையான ஒலிகளையும் அவற்றின் வரிவடிவங்களையும் குறிக்கும் எழுத்தகளாகும்.

துமிழ்மொழியிலுள்ள முதலெழுத்தகள் முப்பது ஆகும்.
அவையாவன:

உயிரெழுத்துகள் - 12
மெய்யெழுத்தகள் - 18

உயிரெழுத்துகள்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள

என்னும் பன்னிரண்டு எழுத்துகளும் உயிரெழுத்துகள் ஆகும்.

உயிரெழுத்துகள் இருவகைப்படும்.

குற்றெழுத்துகள் - 5 (குறில்)
நெட்டெழுத்துகள் - 7 (நெடில்)

குற்றெழுத்துகள்

அ, இ, உ, எ, ஒ என்பன குற்றெழுத்துகள் ஆகும்.
அவை ஒலிக்க எடுக்கும் கால அளவு ஒரு கைந்நொடிப் பொழுதாகும்.

நெட்டெழுத்துகள்
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்பன நெட்டெழுத்துகள் ஆகும். ஆவை ஒலிக்க எடுக்கும் கால அளவு இரண்டு கைநொடிப் பொழுதாகும்.

மெய்யெழுத்தகள்

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
என்னும் பதினெட்டு எழுத்துகளும் மெய்யெழுத்துகளாகும். மெய்யெழுத்துகளுக்கு உடலெழுத்துகள் அல்லது ஒற்றெழுத்துகள் என்னும் பெயர்களும் உண்டு.


மெய்யெழுத்துகள் மூன்று வகைப்படும்.

வல்லெழுத்துகள் - 6 – வல்லினம்
மெல்லெழுத்துகள் 6 – மெல்லினம்
இடையினம் - 6 - இடையினம்

வல்லினம்

க் ச் ட் த் ப் ற் என்பன வலிமையாக ஒலித்தலால் வல்லின எழுத்துகள் எனப்படும்

மெல்லினம்

ங் ஞ் ண் ந் ம் ன் என்பன மென்மையாக ஒலித்தலால் அமல்லின எழுத்துகள் எனப்படும்.

இடையினம்

ய் ர் ல் வ் ழ் ள் என்பனவற்றின் வல்லொலியாகவும் இன்றி மெல்லொலியாகவும் இன்றி இடையில் ஒலித்தலால் இடையின எழுத்துகள் எனப்படும்.

சார்பெழுத்து

உயிரெழுத்துகள் பன்னிரண்டும் மெய்யெழுத்துகள் பதினெட்டும் ஒன்றுடன் ஒன்று புணர்ந்து இருநூற்றுப்பதினாறு உயிர்மெய்யெழுத்துகள் உருவாகும். ஊயிர்மெய்யெமுத்துகளும் ஆய்த எழுத்தும் சார்பெழுத்துகள் ஆகும்.