சனி, 19 டிசம்பர், 2009

கேள்விகளும் - பதில்களும்

பின்வருவம் கேள்விகளுக்கு சரியான விடையின் கீழ் கோடிடுக.

1.தமிழிலுள்ள முதலெழுத்துகள் எத்தனை?

1) 30 2) 216 3) 12 4) 18

2.ஒரே கருத்துள்ள இரண்டு சொற்கள் தருக?

1)துயில் 2) இன்பம் 3) உறக்கம் 4) துன்பம்

3.எல்லாளனுக்கான நினைவிடத்தை துட்டகெமுனு அமைத்த இடம் எது?

1) யாழ்பாணம் 2) கொழும்பு 3) கண்டி 4) அநுராதபுரம்

4.ஒழுக்கத்தால் சிறந்தவரைத் தமிழர் எவ்வாறு அழைப்பர்?

1) அறிவாளி 2) சான்றோர் 3) கெட்டிக்காரன் 4) புலவர்

5.குமணமன்னன் ஒரு

1) பாடகன் 2) வீரன் 3) வள்ளல் 4) புலவன்

6.ஆழமறியாமல் எதை விடாதே

1) தலையை 2) கையை 3) காலை 4) கண்ணை

7.பெயர்ச்சொல் வகைகள் எத்தனை?

1) இரண்டு 2) ஐந்து 3) மூன்று 4) ஆறு

8.நான்+ ஐ சேர்த்தால் வரும் வடிவம்

1) நானை 2) என்னை 3) நாங்களை 4) நான்ஐ

9.படித்தான் என்பதன் எதிர்கால வடிவம்

1) படித்துவிட்டான் 2) படிக்கிறான் 3) படிப்பான் 4) படிக்கவில்லை

10.உழவர்கள் என்போர்

1) வணிகம் செய்வோர் 2) பயிர்த்தொழில் செய்வோர்

3) வண்டி ஓட்டுவோர் 4) கப்பல் செலுத்துவோர்

11.பச்சை, நீலம், இனிப்பு, வட்டம் என்பன

1) குணப்பெயர் 2) சினைப்பெயர் 3) காலப்பெயர் 4) இடப்பெயர்

12.புலவர் பாடிப் பரிசு பெற்றார். இங்கே வந்துள்ள செயற்படுபொருள்

1) பரிசு 2) புலவர் 3) பெற்றார் 4) பாடி

13.உயிரைக்காட்டினும் மானமே பெரிதென எண்ணி உயிர்நீத்த மன்னன் யார்?

1) செங்குட்டுவன் 2) கரிகாலன் 3) கணைக்கால் இரும்பொறை

4) குமணன்

14.உயர்திணைக்குரிய பால்கள் எத்தனை?

1) 1 2) 4 3) 3 4) 5

15.முன்னிலை எனும் இடவகைக்கு ஓர் எடுத்துக்காட்டு

1) நீர் 2) அவர்கள் 3) நான் 4) நாங்கள்

16.கண்ணன் பந்தை அடித்தான். இங்கு கண்ணன் என்பது.

1) பயனிலை 2) எழுவாய் 3) செயற்படுபொருள் 4) ஒருமை

17.பயனிலைச் சொல்லுடன் யாரை? ஏதை? எவற்றை? ஏன்பவற்றுள் ஏதாவது ஒன்றை வினவினால் வருவது.

1) பயனிலை 2) எழுவாய் 3) வினைமுற்று
4) செயற்படுபொருள்

18.பல பயன்களைத் தருவதால் நாம் நன்கு பேணவேண்டிய விலங்கு

1) அரிமா 2) வரிக்குதிரை 3) ஆ(பசு) 4) ஒட்டகச்சிவிங்கி

19.இலக்கணத்தில் ஒரு பொருள் பன்மொழி என்பது

1) ஒரு பொருளைக் குறிக்கும் பலசொல் 2) பலமொழிகள்

3) பழமொழிகள் 4) பலபெயர்

20.ஒன்றின் பகுதிப்பொருளை அல்லது உறுப்பைக் குறிப்பது

1) பொருட்பெயர் 2) சினைப்பெயர் 3) இடப்பெயர்
4) தொழிற்பெயர்

21.பண்டாரவன்னியன் யாரோடு போர் புரிந்தான்

1) ஒல்லாந்தரோடு 2) போத்துக்கேயரோடு 3) ஆங்கிலேயரோடு 4) அல்பானியரோடு

22.அகம் புறம் என்று இலக்கியம் வகுத்தவர்

1) வடவர் 2) தமிழர் 3) சமணர் 4) ஆரியர்

23.அறுவடைசெய்யும் போது பாடப்படும் பாடல்

1) ஏர்பாட்டு 2) தாலாட்டு 3) சினிமாப்பாடல் 4) அறுவடைப்பாடல்

24.உள்ளத்தினின்று வெளிப்படும் பண்பட்ட இயல்பு

1) உளவியல் 2) பண்பாடு 3) உறவு 4) சிறப்பு

25.மனிதன், தேவர்கள் என்பன

1) உயர்திணை 2) அஃறிணை 3) வினைச்சொல்
4) பல்திணை

26.எல்லாளன் கட்டிய குளம்

1) இரணைமடுக்குளம் 2) பாவற்குளம் 3) வவுனிக்குளம்

4) கல்மடுக்குளம்

27.தமிழ்ச்செல்வம் ஆகமாட்டாயா என்ற பாடலில் தமிழ் இறைவனார் என்று குறிப்பிடப்படுபவர்

1) ஒளவையார் 2) திருவள்ளுவர் 3) பாரதியார் 4) காசியானந்தன்

28.வாக்கியத்தில் கருத்தை முடிக்கு சொல்

1) செயற்படுபொருள் 2) எழுவாய் 3) பயனிலை 4) வினையெச்சம்

29.மயிலாடுமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை முதலில் கவர்வது

1) மணிக்கூடு 2) கோபுரம் 3) மரநிழல் 4) நெற்பயிர்கள்

30.மூட ஆமை என்பது

1) ஊனமுள்ள ஆமை 2) பெரிய ஆமை 3) அறிவற்ற ஆமை

4) நன்றியுள்ள ஆமை