சனி, 19 டிசம்பர், 2009

பொருத்தமான சொல்லை இடுக

சரியான பதிலை இடைவெளியில் எழுதி சொல்லியத்தை நிறைவு செய்க.

1.தமிழர் தம் _____________ நாளாக தைப்பொங்கலைக் கொண்டாடுவர.

( திரு, திறு )

2.தமிழ்ப் _____________ உலத்தில் சிறந்ததாக போற்றப்படுகிறது.

( பண்பாடு, பன்பாடு )

3.___________ ஊற்றியதால் பயிர்கள் நன்றாக வளர்ந்தன.

( நீரை, நீறை )

4.சிறுவர்கள் கடற் ________________ பந்தடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

( கறையில், கரையில் )

5.தமிழீழத் தேசிய தலைவர் தமிழர் ___________ நிலை நாட்டினார்.

( மரபை, மறபை )

6._____________ தவறியதால் கண்ணகி சினந்து தன் காற்சிலம்பை உடைத்தாள்.

( அரம், அறம் )

7.தமிழன் என்றோர் இனமுண்டு என்ற பாடலை_______________ கவிஞர் எழுதினார்.

( நாமக்கள், நாமக்கல் )

8.ஆற்றிலுள்ள கெண்டை _______________ துள்ளிக் குதிப்பதைப் பார்க்க மகிழ்வாக இருந்தது.

( மீண்கள், மீன்கள் )

9.மழை பெய்ததால் வவுனியாவில் வெள்ளம் மக்களின் ______________ ஈரமாக்கியது.

( கூடாரங்களை, கூடாறங்களை )

10.திரு___________ பந்தலில் வாழைகளைக் கட்டினர்.

( மனப், மணப் )